Sunday, April 30, 2006

மே மாத திசைகளில்

மே மாத திசைகளில்

ஜனநாயகத்தின் தூண்கள்

பல இடையூறுகளுக்கிடையே இந்திய ஜனநாயகம் சரியான பாதையிலேயே பயணித்து வந்துள்ளது என்று விளக்கி, " இந்தியாவில் படித்தவர்களும் பெருகி, பொருளாதாரமும் பெருகும் பொழுது ஜனநாயக முறையில் பல மாற்றங்களும் ஏற்படவேச் செய்யும். அந்த மாற்றங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.." என்று திடமாக நம்புகிறார் நியூஜெர்ஸியிலிருந்து தமிழ் சசி.

"ராமனோ, ராவணனோ ஆட்சி அமைக்கட்டும், நல்லதாக ஏதேனும் செய்தால் கை தட்டுவோம், கெட்டதாகச் செய்தால் சலித்துக்கொள்வோம். ஆனால், இவை எவையும் எங்களை பாதிக்காது என்று விளாம்பழத்துக்கும் ஓட்டுக்கும் உள்ள தொடர்புதான் அவர்களுக்கும், அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும் இருக்கும்." என்கிறார் பெங்களூரிலிருந்து எழுதும் மென்பொருளாளர் சொக்கன்.

அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள நமது கடமைகளையும் உரிமைகளையும் சுட்டிக்காட்டி நாட்டு நிலவரத்தை அலசுகிறார் திருச்சியிலிருந்து புஷ்பவனம், செயலாளர், தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு.

"அறிவாயுதமாகத் தோன்றிய இதழ்கள் நுகர் பொருட்களாக மாறிப்போயின...பத்திரிகைகள் இன்று அவற்றின் பாரம்பரியத்தைக் கொண்டோ, உள்ளடக்கத்தைக் கொண்டோ மதிக்கப்படுவதில்லை. வர்த்தக நிறுவனங்களைப் போல அவற்றின் விற்பனையைக் கொண்டு மதிக்கப்படுகின்றன." என்று மூத்த பத்திரிகையாளரும் திசைகளின் கௌரவ ஆசிரியருமான மாலன், டில்லியிலிருந்து எழுதுகிறார்.

இவர்களுடன் அண்டை அயல் பகுதியில், நேபாளத்தில் உருவாகியிருக்கும் பிரச்சனைகளின் பின்புலத்தை மதுரையிலிருந்து அலசுகிறார் ஜெகதீசன், முன்னாள் சிறப்பு அலுவலர், (OSD) இந்தியப் பிரதமர் அலுவலகம்.
லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இலங்கையில் அமைதி வேண்டும் என்ற தன் கருத்தை முன்வைக்கிறார். கொரிய மக்களின் அன்பை சிலாகிக்கிறார் கொரியாவிலிருந்து கண்ணன். ஆங்கில கதாசிரியர் ஓஹென்றியின் கதையின் மொழிபெயர்ப்பின் மூலம் அமெரிக்கர் ஒருவரின் குணாதிசியத்தை படம் பிடித்து நமக்குத் தருகிறார், பவித்ரா ஸ்ரீனிவாசன், சென்னை.

கவிதைகள் பகுதியை அலங்கரிப்பவர்கள், அருள் முருகன், கீதா,
அரவிந்தன், பன்னீர்செல்வம், மற்றும் சேவியர்.

வாழ்க்கை பகுதியில் இசைக்கலைஞர் ஓ.எஸ். அருணிடம் நேர்காணல் செய்கிறார், சென்னையில் மதுமிதா. சிறுகதைகளை அளிப்பவர்கள் சந்திரசேகர், சரவணன், மற்றும் கவிநயா. புதுமைப்பித்தன் வரலாறு புத்தகத்தை, புத்தகங்கள் பகுதியில் பரிந்துரைப்பவர் சுப்பிரபாரதி மணியன்.


திசைகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி வாசகர்களும், எழுத்தாளர்களும் கலந்துரையாட, இங்கே இந்த வலைப்பதிவில் கீழே கருத்துப் பெட்டியில் உங்கள் கருத்துக்களை பதியலாம்.

சரி. இப்போது கோடை வெய்யில் தகிக்கிறதே.....? அதனால் என்ன? கிளம்புங்கள் ஒரு நல்ல புகைப்படக் கருவியை எடுத்துக்கொண்டு - இஷ்டம்போல் பயணியுங்கள். அப்படியே திசைகளுக்கும் போட்டோக்களுடன் ஒரு பயணக் கட்டுரை எழுதி அனுப்பி விடுங்கள் !

ஆமாம்... அடுத்து வரும் ஜூன் இதழின் சிறப்புப் பகுதி - " பயணம்". ஏற்கனவே சென்றிரூந்த இடங்கள் பற்றியும் எழுதுங்கள். வயதில் மூத்த வாசகர்கள் "அந்தக் கால" பயண அனுபங்களையும் எழுதலாமே? மூன்று நாள் ரயில் பயணம் / கூஜாவில் தண்ணீர் / என்று ஏகமாக பழைய பிரயாண அனுபங்கள் இருக்கலாம். பயணம் சம்பந்தமான அனைத்துக் குறிப்புகளும் / யோசனைகளும் வரவேற்கப்படுகிறது.

அன்புடன்

அருணா ஸ்ரீனிவாசன்

3 Comments:

Blogger Unknown said...

Jegadeesan's article about nepal is very informative.The dilemma for india is How to reconcile the democratic aspirations of VILLAGE nepal represented by maoists,Urban middleclass represented by the sevenparty alliance,feudalism represented by vishnu avtar the King,nepalese army allied to king and getting arms especially tanks from china.China has openly condemned the maoists for calling themselves thus and sided with the king.The villagers have already tasted power of blackmailing the old ruling upper castes and living without paying any taxes to the burecaracy.The real trick for India is to make the present 3 month ceasefire declared by maoists to continue and declare its own ceasefire by the RNA and Abjure VIOLENCE BY maoists.But the tricky King supported by china/Pakistan will not allow this.Karansingh is not a honest broker.Will Yechury succeed?

11:54 PM  
Anonymous Anonymous said...

Dear Sirs,

Please covey our congradulations to Mr. A.Jagadesan for his article
"THAMILNATTU THEIRTHAL VANNATHIRAI" ( தமிழ்நாட்டு தேர்தல் வண்ணத்திரை) in your April Editon for predicting so clearly the poll verdit of Tamilnadu. His conclusion
"முதல் முறையாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வரும். கருணாநிதி இருக்கும் வரையில் அவ்வளவாக பிரச்சனை இராது. ஆனால் அவருக்கு பின் கூட்டணியில் பெரிய பிரளயமே காத்திருக்கிறது"
is the order of the day.
Radhakrishnan.K

10:55 AM  
Anonymous Anonymous said...

அப்பா சிறு கதை படிக்க நன்றாக இருந்தாலும், முடிவு அவ்வளவு நன்றாக இல்லை. மனக்கஷ்டத்தில் வாழ்பவர்களுக்கு இது ஒரு விருந்து போல் இருந்திருக்கலாம். இம்மாதிரியான கதைகள் மூலம், நாம் மென்மெலும் தற்கொலையை ஆத்ரிக்கவே செய்கிறோம். மேலும் அப்பா ஒரு பொம்மை ஆக்கப்ப்ட்டு இருக்கிறார். மனிதன் எவனாக இருந்தாலும், அவனது ஆத்மா இவ்வுலகில் உள்ள எல்லாவற்றிற்கும் உயர்ந்தது. ஒரு சாதாரண வேலைக்கு, வீட்டில் பெற்றவ்ர்களின் ஏமாற்றத்திற்கு சவால் கொடுத்து, சமாளித்து மீண்டு வர முடியாமல், தன் உயிரை மாய்த்து கொள்ள்வதில்தான் அதற்கு பதில் இருக்கிறது என்பது போன்று சித்தரித்திருப்பது ஏனோ?

Masilamani

11:22 PM  

Post a Comment

<< Home