Saturday, April 01, 2006

ஏப்ரல் மாத திசைகள்

வரும் மே மாதம் 8 ந் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல். பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ள தமிழக அரசியல் களம் இன்று தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் சொல்லலாம். இந்த நிலையில் இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும்? ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மைப் பெற வாய்ப்புள்ளதா? அல்லது பல கட்சிக் கூட்டணி முதன் முறையாக இங்கு அவதாரம் எடுக்குமா? அப்படியென்றால் எந்த மாதிரிக் கூட்டணி? கொள்கை அடிப்படையிலா அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றிணைக்கப் பட்டு பின்னர் ஆட்டம் காணும் தொத்தல் கூட்டணியா?

பலக் கேள்விகளை ஏப்ரல் மாத திசைகளின் எழுத்தாளர்களின் முன் வைத்தோம். கூட்டணி ஆட்சி வருவது தமிழ் நாட்டுக்கு நல்லது என்று கூறும் நமது கௌரவ ஆசிரியர் மாலன், எப்படி ஓட்டுப் போடலாம் என்று விவரிக்கிறார். கணியனின், கணிப்பல்ல, கருத்து என்ற கட்டுரை, இந்த தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்று தனித்தனியே ஒரு SWOT அலசல் செய்கிறது. மக்கள் யார் பக்கம் என்று கேள்வியை எழுப்பி அலசுகிறார் பத்திரிகையாளர் ராம்கி.

பெண்கள் அரசியலிலிருந்து ஒதுங்குகிறார்களா அல்லது அவர்களுக்கு வாய்ப்பளிக்க நம் அரசியல்வாதிகள் தயங்குகிறார்களா என்று ஆராய்வது அருணா ஸ்ரீனிவாசன். அமெரிக்காவிலிருந்து பாஸ்டன் பாலா தன் மந்திரக்கண்ணாடியில் துல்லியமாகவே தேர்தல் வானைப் பார்த்து அலசி தன் விருப்பம் என்ன என்பதை விரிவாக சொல்கிறார்.கூட்டணி ஆட்சி முதல் முறையாக வர வாய்ப்புள்ளது என்று கூறுவது ஏ. ஜகதீசன், ஓய்வு பெற்ற மத்திய அரசு உளவு இலாகா அதிகாரி; இன்றைய அரசியலை ஒரு தேசீய அக்கறையுடன் கவனித்து வருபவர்.

கூட்டணிகளின் கூட்டல் கழித்தல்களைத் தொகுதி வாரியாக விரிவாக அலசும் புருஷோத்தமன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இன்னும் ஒரு தேர்தல் தேவை என்கிறார்.

மற்றபடி, இந்த இதழில் மாலனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து தேர்தல் கருத்து வெளிப்படும் சிறுகதை ஒன்றும், சரவணின் சிறுகதை ஒன்றும் இடம் பெறுகிறது.கவிதைகள் பகுதியை அலங்கரிப்பவர்கள், வாணி ஜோசப், கீதா, மதுமிதா, சிங் செயகுமார், மற்றும் கவிநயா.இவர்களுடன், கொரியாவிலிருந்து, குரலுடன் கூடிய மின்னஞ்சல் பற்றி கண்ணனும், சினிமா பகுதியில் கேரளாவின் எம் டி வாசுதேவன் நாயரின் படங்கள் பற்றிய கட்டுரையுடன் சுப்பிரபாரதி மணியனும் கலந்து கொள்கிறார்கள். இந்த இதழிலிருந்து இரண்டு புதிய பகுதிகள். " அண்டை, அயல் " பகுதியில் இதர மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள் இடம் பெறும். இந்த இதழில் ஆங்கில நாவலாசிரியர் ஓ ஹென்றியின் கதை ஒன்றை பவித்ரா ஸ்ரீனிவாசன் மொழிபெயர்க்கிறார்."வாழ்க்கை" என்ற பகுதியில் கலை, இசை மற்றும் வாழ்க்கையின் இதர மென்மையான அம்சங்களைப் பற்றியக் கட்டுரைகள், மற்றும் பல்வேறு துறைகளில் வல்லுனர்களின் நேர்காணல்கள் இடம் பெறும். இந்த இதழில், கீத கோவிந்தம் கவிதைகளின் அடிப்படையில் அமைந்த ஓவியங்களைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளார் அரவக்கோன். இந்த இதழின் போதி மர சிந்தனையை அளிப்பவர் வேதாத்ரி மகரிஷி.தமிழகத்திற்கு வெளியே அயல் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மேம்பாட்டுக்கு அரசியல் ரீதியாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த இரு தமிழர்கள் சமீபத்தில் மறைந்தார்கள். ஒருவர், இலங்கையில் போராளியாக வாழ்வைத் துவக்கிய, எழுத்தாளர் சீதாம்பரி புஷ்பராஜா. இன்னொருவர், சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் துணைப்பிரமருமான சின்னத்தம்பி ராஜரத்தினம். இருவரின் மறைவுக்கும் திசைகள் அஞ்சலி செலுத்துகிறது.

திசைகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி வாசகர்களும், எழுத்தாளர்களும் கலந்துரையாட இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திசைகளின் இடது பக்கம் இதன் சுட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியைச் சொடுக்கி உங்கள் எண்ணங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கடைசியில் மறந்துவிடாமல், பெனாத்தல் சுரேஷ், திசைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துக்கொடுத்துள்ள கருத்துக் கணிப்பு பெட்டியில் உங்கள் ஊகங்களின் முடிவுகளையும் ஆராய்ந்து பாருங்கள். யார் கண்டார்கள்? உங்கள் ஊகங்கள் உண்மையாக இருக்குமோ என்னவோ!!


அன்புடன்
அருணா ஸ்ரீனிவாசன்

1 Comments:

Anonymous Anonymous said...

I read with Interest Mr.A Jegadeesan's article as a former collegue and a dear friend.Vaiko has to leave DMK because it had no space for an independent thinking politician apart from the family of Mr.karunanidhi.It was a bitterpill when he has to join karunanidhi again for survival.But 19 months incaceration under POTA is not enough for vengence and loss his face means Vaiko has to obey the dictates of his masters who are the NRI tamils who fund him.I also found that vijayakanth will get 10% of the younger voter's ballot rather on the heigher side.for me karunanidhi is the problem for DMK as the people are intelligent and the woman voter is overwhlmingly for ADMK as jayalalitha has rectified her own mistakes.the government servants and their families who have sufferred also will decide in its own way some marginal consituencies.After Karnanidhi who?People see the face of stalin with not much hope.After jayalalitha who?there is noface which one can think of.There is no innerparty democracy in ADMK.But i think she has given an administration which will decide marginally in her favour.

5:17 AM  

Post a Comment

<< Home